Wednesday, August 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசுரேன் ராகவன் வெளியிட்ட நம்பிக்கை

சுரேன் ராகவன் வெளியிட்ட நம்பிக்கை

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க 54%  வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து கந்தளாய் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் ரணில் விக்கிரமசிங்க முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.

அரச பல்கலைக்கழகம் ஒன்றின் தலையீட்டில் கடந்த மூன்று வாரங்களில் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments