Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபடுக்கை அறையிலிருந்து மீட்கப்பட்ட வாள்கள்

படுக்கை அறையிலிருந்து மீட்கப்பட்ட வாள்கள்

தெய்யந்தர அதபத்துகந்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அதபத்துகந்த,  டீயெந்தர பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,  நேற்றையதினம்(17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது,  ​​ வீடொன்றின் படுக்கையறையில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வாள் இரண்டரை அடி நீளம் கொண்டதுடன்,  சந்தேகநபரிடம் இருந்து பத்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments