வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்
இளம் வேட்பாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான
செந்திவேல் தமிழினியன் வயது 33 என்பவரே திடீரென உயிரிழந்துள்ளார் .
கடந்த 4 நாட்களாக சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

