Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பம்

மாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பம்

எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில்,  யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் இன்றையதினம் காலை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது பொது சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டது.

சிரமதானப் பணிகளில் மாவீரர்களின் பெற்றோர்கள்,  உறவினர்கள், முன்னாள் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments