10ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு புத்தளம் மாவட்டத்தில் இன்று காலை
7.00 மணி முதல் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் புத்தளம் ஆனமடு சிலாபம் வென்னப்புவ மற்றும் நாத்தாண்டி ஆகிய
தொகுதிகளில் 470 வாக்களிப்ப நிலையங்களில் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
08 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக புத்தளம் மாவட்டத்தில்
ஆறு இலட்சத்தி 63 ஆயிரத்தி 673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் இன்று நண்பகல் 02 மணி 41 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக புத்தளம் மாவட்டத்தில் பூர்த்தி , செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.

