Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமியன்மார் அகதிகளுக்கு உணவு வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு

மியன்மார் அகதிகளுக்கு உணவு வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த படகில் வருகை தந்தோர் தற்போது திருகோணமலை -அஷ்ரப் துறைமுகத்தில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

மியன்மார் அகதிகளுக்கு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினர் இன்றைய காலையுணவு மற்றும் பகல் போசன உணவுகளையும் வழங்கிய அதேவேளை அத்தியாவசிய ஆடைகளையும் பெண்கள் வலையமைப்பினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கை கடற்படையினர்,  துறைமுக அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் மியன்மார் அதிகாரிகளுக்கு தேவையான உரிய ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments