Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் சிரமதானப் பணிகள்

தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் சிரமதானப் பணிகள்

தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவினுடைய நினைவுச் சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் இன்று(11) காலை சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இச் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள்இ ஆதரவாளர்கள் தொண்டர்கள்,  கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அண்மையில் நிலவிய காற்று மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கம் அமைந்துள்ள பகுதிகள் புற்கள் வளர்ந்து பற்றைக் காடாக காட்சியளித்த நிலையில் இவ் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments