படலந்த ஆணைக்குழு அறிக்கை’ சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால்
இன்று(14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரத்நாயக்க,
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி
அனுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து அமைச்சரவை ஒரு கொள்கை முடிவு
எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அறிக்கை குறித்து பரிந்துரைகளை வழங்கவும், தேவையான ஆலோசனைகளுக்காக
சட்டமா அதிபருக்கு அனுப்பவும் ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

