தொழிலதிபர் சுலக்சன் யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சுயேட்சைக் குழுக்களை களமிறக்கியுள்ளார்.
இச் சுயேட்சைக் குழுக்களுக்கு யாழ் தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை, வேலனை
பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளில் மட்டுமே சுயேட்சை குழுவாக
போட்டியிடுவதற்கு கட்டுப் பணம் செலுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

