Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்த கோரிக்கை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்த கோரிக்கை!

தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள,இடைநீக்கம் செய்யப்பட்ட
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தடுப்புக்காவலில் உள்ள
காலத்தில் வீட்டிலிருந்து உணவு பெறுமாறு விடுத்த கோரிக்கையை மறுபரிசீலனை
செய்வதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையர் காமினி பி. திசாநாயக்கஇ தென்னகோன் தனது
இல்லத்திலிருந்து உணவு கொண்டு வருவதற்கு முறையாக அனுமதி கோரியுள்ளதாக
தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரது கோரிக்கையை ஆதரிப்பதற்கான சரியான காரணங்களை
வழங்குமாறு திணைக்களம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான தகுந்த காரணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சிறை அதிகாரிகள் அவருக்கு
வீட்டில் இருந்து உணவைப் பெற அனுமதிப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை
எடுப்பார்கள் என்று திசாநாயக்க கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments