பயிற்சி விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை விமானம்
அண்மையில் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரத்நாயக்க,
விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் விசாரணை
அறிக்கையின் நகலைக் கேட்டுப் பெற்றதாகக் கூறினார்.
அந்த அறிக்கையின் படி, விமானம் மற்றும் இயந்திரங்கள் பழையவை அல்ல என்று
அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
சாலைகளில் பழைய வாகனங்கள் ஓட அனுமதிக்கப்படுவதால்இ விமானங்களில்
அப்படிச் செய்ய முடியாது.
இந்த குறிப்பிட்ட விமானத்தை இயக்கிய விமானிகள் பயிற்சியில் இருந்தனர். அவர்களால் ஒரு தவறு நடந்துள்ளது. பயிற்சியாளர்கள் விபத்தில் இருந்து தப்பியதில் நாங்கள் நிம்மதியடைகிறோம்.
இது பயிற்சியின் போது ஒரு சாதாரண சம்பவம், உலகம் முழுவதும் இவ்வாறான விபத்துக்கள் நடக்கும் என்றும் அவர் கூறினார்.

