உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு
ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று
தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு
ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு
வழங்கப்படும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

