Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசிறையில் அடைக்கப்பட்ட பெண் சட்டத்தரணியை விடுவிக்குமாறு உத்தரவு..!

சிறையில் அடைக்கப்பட்ட பெண் சட்டத்தரணியை விடுவிக்குமாறு உத்தரவு..!

நீதிமன்ற அவமதிப்புக்காக புத்தளம் மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில்
வைக்கப்பட்ட வழக்கறிஞரை உடனடியாக விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய
தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டுப் பிரிவின் பதில் தலைவர்
முகமது லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய
நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

மேலும்இ வழக்கறிஞரை விடுதலை செய்த பின்னர் எதிர்வரும் சித்திரை மாதம் 28 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தளம் மேல் நீதிமன்றப் பதிவாளரால்,  சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு எதிராக
இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திஇ வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,  பிணை நிபந்தனைகள் பூர்த்தியாகும் வரை வழக்கறிஞரை விளக்கமறியலில் வைக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

அநாகரிகமான முறையில் புடவை அணிந்திருந்ததால்இ சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக புத்தளம் உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதிபதி முன்னர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை அழைத்துஇ அநாகரிகமான முறையில்
சேலை அணிய வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், நீதிமன்ற அறைக்குள் நுழையும்போது தலைவணங்கத் தவறியதன்
மூலமும்,  சம்பந்தப்பட்ட வழக்கில் பிணை கோரி விண்ணப்பிக்கும்போது
உயர் நீதிமன்ற நீதிபதியிடம் மரியாதையுடன் பேசத் தவறியதன் மூலமும் நீதிமன்ற
அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக தாக்கல்
செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments