Saturday, August 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநிராகரிக்கப்பட்ட ​வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

நிராகரிக்கப்பட்ட ​வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பிறப்புச் சான்றிதழ்கள்,  சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதன்படி,  நிராகரிக்கப்பட்ட சுமார் 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வுஇ, தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் குறித்த உத்தரவுகளை பிறப்பித்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த அமர்வு,  சமாதான நீதவான்களால்
சான்றளிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மற்றும் சத்தியப்பிரமாணத்தில் இருந்து எழும்
பிரச்சினைகளின் அடிப்படையில் வேட்புமனுக்களை நிராகரிக்க தேர்தல் அதிகாரிகள்
எடுத்த முடிவு நியாயமானது என்று கடந்த 4 ஆம் திகதி அடிப்படை உரிமைகள் மனு மீது உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதி
சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அதன்படி,  இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முந்தைய முடிவை
மறுபரிசீலனை செய்யுமாறும்,  இந்த விவகாரம் தொடர்பாக புதிதாக தாக்கல்
செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க வேண்டாம் என்றும் அரசாங்கத்தின்
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தை கோரியதாக நீதிபதி தனது தீர்ப்பில்
குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தனது நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும்போதுஇ உயர் நீதிமன்றம் தொடர்புடைய
முடிவை எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி,  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நேரத்தில் தனது நீதிமன்றத்திற்குப் பொருந்தாது என்றும் குறிப்பிட்டார்.

அதன்படி, தொடர்புடைய வேட்புமனுக்களை நிராகரிக்கும் தேர்தல் அதிகாரிகளின்
முடிவை இரத்து செய்யும் ஒரு சான்றளிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி
குறிப்பிட்டார்.

அத்தோடு,  நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகளின் உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய மக்கள் முன்னணி,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும்
சுயேச்சைக் குழுக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குறித்த மனுக்களை
தாக்கல் செய்திருந்தன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments