Sunday, August 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: விளையாட்டு துறை அமைச்சர் விஜயம்

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: விளையாட்டு துறை அமைச்சர் விஜயம்

வட மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிறுவுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக,  இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர் இன்று
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.

முன்மொழியப்பட்ட மைதானத்திற்காக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு
கையகப்படுத்தப்பட்டுள்ள மண்டைத்தீவில் உள்ள ஒரு நிலத்தை இருவரும்
இதன்போது ஆய்வு செய்தனர்.

அத்துடன் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ககன யஹமபத்தும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டார்.

இந்த விஜயத்தின் போது,  ​​அதிகாரிகள் அந்த இடத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு
செய்துஇ வடக்குப் பிராந்தியத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக்
கொண்ட இந்த வசதியின் மேம்பாட்டுக்கான ஆரம்பத் திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

தற்போது தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், இலங்கை கிரிக்கெட்
உயர் செயல்திறன் மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றும் சனத் ஜெயசூர்யா,
கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம்
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளுக்கு
நிதி உதவி கோரினார்.

‘இந்த முயற்சி வடக்கு மாகாணத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும்
மற்றும் கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
என்று விளையாட்டு அமைச்சர் சுனில் கமகே தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். நிதி ஆதாரத்தைத்தான்
இப்போது இறுதி செய்ய வேண்டும். கடந்த மாதம் இந்திய உயர் ஸ்தானிகரிடமும்
நான் ஒரு கோரிக்கையை வைத்தேன்இ கடந்த வாரம் இந்தியப் பிரதமரிடமும்
சனத் ஒரு கோரிக்கையை வைத்தார். இலங்கை கிரிக்கெட்டும் இந்தத் திட்டத்திற்கு
ஆதரவளிக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments