Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேர்தல் ஆணையகம் விசேட அறிக்கை

தேர்தல் ஆணையகம் விசேட அறிக்கை

உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பின் போது வாக்காளர்கள் தவிர்க்க வேண்டிய
விடயங்கள் குறித்து தேசிய தேர்தல் ஆணையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின் போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை
எடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி,  வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்கள் அல்லது
வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்கவும் பொதுமக்களுக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொபைல் போன்களைப் பயன்படுத்துதல், துப்பாக்கிகளை வைத்திருத்தல்,
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் அல்லது மது அருந்திவிட்டு வாக்குச் சாவடிக்குள் நுழைதல் ஆகியவை தவறான நடத்தையாகக் கருதப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments