நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான
தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகளிடம்
கையளிக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் யாழ் மாவட்டத்தில், இன்றைய தினம்(05) காலை 08.18 மணிக்கு
முதலாம் கட்ட பேருந்துக்களில் – ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையத்திற்குச்
செல்லும் முதலாவது பேருந்து யாழ் மத்திய கல்லூரிக்கு முன்பாக இருந்து புறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், பிரதித் தேர்தல் ஆணையாளர் சசீலன் , தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் பொ. தயானந்தன் , மேலதிக மாவட்ட செயலாளரும் (காணி) நலனோம்பல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான க.ஸ்ரீமோகனன் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


