தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை
முன்னிட்டு மே18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது
நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக நேற்று உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

