நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில்
இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள்
மற்றும் வேட்ப்பாளர்களாக போட்டியிட்ட அனைவருக்குமான விசேட கூட்டம்மொன்று
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த கூட்டம்
நாளை ( 17.05.2025 ) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி
மன்றங்களுக்கும் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் குறித்த கூட்டத்திற்கு
கலந்துகொள்ளுமாறு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பிணை
விடுத்துள்ளார்.

