புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டம் இனவாதம் மதவாதம் அல்லது வேறு விடயம் ஒன்றை காரணமாக்கிக்கொண்டு அடக்குமுறைக்கு பயன்படுத்துவதற்கு தயாரிப்பதில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்துச்செய்து புதிய சட்டம் ஒன்றை வரைவதற்கு
ஏற்புடையதாக பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதன் கீழ், பல்வேறு
அமைப்புகள் மற்றும் 240 பேர் இணைந்து தயாரித்து கைச்சாத்திட்டுள்ள யோசனைகள் அடங்கிய பிரேரணை ஒன்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் நேற்று நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.
இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இனவாதம் மதவாதம் அல்லது வேறு விடயம் ஒன்றை காரணமாக்கிக்கொண்டு
அடக்குமுறைக்கு மயப்படுத்துவதற்கு இந்த சட்டத்தை தயாரிப்பதில்லை.

