Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகதிர்காம காட்டுப்பாதை 20 ஆம் திகதி திறக்கப்படும்

கதிர்காம காட்டுப்பாதை 20 ஆம் திகதி திறக்கப்படும்

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை
யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
திறக்கப்பட்டுஇ மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூலை மாதம் 04 ஆம் திகதி
மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம
தெரிவித்தார்.

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா
26 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 11 ஆம் திகதி தீர்த்தோற்சவ அத்துடன்
நிறைவடையும் என கூறினார்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில்
ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை
சென்றடைவது வழக்கமாகும்.

வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி காலை உகந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெற
இருக்கும் ஆரம்ப வைபவத்தை அடுத்து காட்டுப்பாதை காலை ஆறு மணி முதல்
பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும் அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டுக்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments