Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாசெம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தென்னிந்திய நடிகர்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தென்னிந்திய நடிகர்

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும்,  கோரமாகவும் அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய திரைப்பட நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரதும் ஆணித்தரமான கருத்து.

ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் சிங்கள இராணுவத்தின்
கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை.

குறிப்பாக,  அங்கு தாயினதும்,  சேயினதும்,  இளைஞர் – யுவதிகளதும் பெரியவர்களினதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

பாடசாலை செல்கின்ற சிறுவன் ஒருவன் புத்தகப் பையுடன் புதைக்கப்பட்டிருக்கின்றான் . இவை அனைத்தும் மிகவும் மோசமான மனிதாபிமானம் அற்ற செயலாகவே உள்ளது.

இந்தநிலையில்,  இதனை செய்தவர்களிடமே நீதியை கேட்டால் அது கிடைக்காது.
அதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கே இந்த பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும்.

இந்த கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்கு கொண்டு
செல்ல வேண்டும். அதற்கு தமிழர்களாகிய நாங்கள் தான் பாடுபட வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த விடயமாக கொண்டு செல்லப்பட்டு சரியான
கிடைக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments