ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தேனியாவுக்கு
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.
இந்த ஆண்டு வெசாக் போயா அன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதன் கீழ்
தண்டனை பெற்ற வங்கியாளரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான
விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அமைச்சரவை முடிவின்படி
உபுல்தேனியா கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
முந்தைய நடவடிக்கைகளின் போது, அதுல திலகரத்னாவை ஜனாதிபதி மன்னிப்பு
பட்டியலில் இல்லாத போதிலும்இ அவர் சட்டவிரோதமாக விடுவித்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
உபுல்தேனியா சட்ட நடைமுறைகளைத் தவிர்த்து, ‘தனியார் பேரரசு’ போல துறையை
இயக்கியதாகக் கூறப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளில் 60க்கும் மேற்பட்ட கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பு
முறையைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்று
கண்டறியப்பட்டுள்ளது.

