Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கையில் கடுமையாகும் ஆசன பட்டி சட்டம்

இலங்கையில் கடுமையாகும் ஆசன பட்டி சட்டம்

எதிர்காலத்தில் ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்தச் சட்டத்தை பின்பற்றத் தவறும் பேருந்து சாரதிகளின் உரிமங்கள் இரத்து
செய்யப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

காலி மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதேஅவர் இதனைக் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,350 பேர் வீதி விபத்துக்களில் இறக்கின்றனர், சுமார் 6, 000 பேர் படுகாயமடைகின்றனர்.

அதனால்தான் போக்குவரத்து அமைச்சு 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான வீதி பாதுகாப்பு திட்டத்தை கடுமையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ்இ நாங்கள் சீட் பெல்ட் ஒழுங்குமுறையை விதிப்போம்,
தொடர்புடைய வர்த்தமானியை வெளியிடுவோம்.

வருடாந்திர இறப்பு எண்ணிக்கையை 2,300 லிருந்து 2, 000 க்கும் குறைவாகக்
குறைக்க இந்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments