Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபத்து: பெண் பலி

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபத்து: பெண் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற
விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண்ணை,
பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால்
தாக்கப்பட்டார்.

இதனால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் சற்று முறுகல் நிலை
ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments