Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஎதிர்க்கட்சி காணும் கனவு ஒருபோதும் பலிக்காது- ஜனாதிபதி

எதிர்க்கட்சி காணும் கனவு ஒருபோதும் பலிக்காது- ஜனாதிபதி

பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கனவு காண்பதாகவும்,  இந்த பேரழிவு கனவு ஒருபோதும் நனவாகாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

இதன்போது கருத்து வௌியிட்ட ஜனாதிபதி,

பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கனவு காண்பதாகவும்,  இந்த பேரழிவு கனவு ஒருபோதும் நனவாகாது என்றும் கூறினார்.

“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போருக்குப் பிறகுஇ தொடர்ந்து
ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
கொழும்பில் குண்டுகள் வீசப்படும் என்று எதிர்பார்த்தனர். அப்போது எங்கள்
இராணுவ தளபதி பாகிஸ்தானில் இருந்தார். ஆனால் இங்கு எதிர்க்கட்சியினர்
கொழும்பில் குண்டுகள் வீசப்படும் என்று எதிர்பார்த்தனர். அது ஒரு ஆசை. பின்னர்,
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சர்வதேசப் போர் வெடித்த பிறகு,
இப்போது நாடு சரிந்துவிடும் என்று எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை.
அடுத்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு அமெரிக்க வரிக் கொள்கையால் நமது
பொருளாதாரம் சரிந்துவிடும் என்பதுதான்.

எனவேஇ நமது பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும் என்ற கொடூரமான கனவை
காண்கிறீர்கள். அந்த அழிவுகரமான கனவு நனவாகாது. வேறு ஒரு கட்டமைப்பிலிருந்து அரசியல் செய்யத் தொடங்குங்கள். அந்த கட்டமைப்பு தவறு. ஆகஸ்ட் ஜனாதிபதி ஒருவர் இருந்தார்,  தற்போது அவர் பாராளுமன்றத்திலும் இல்லை…” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments