Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெஞ்சோலை வளாகத்தில் விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம்,  இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை
வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை
நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம்
அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள
செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் இன்று
இந் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி,  அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன்,  புதுக்குடியிருப்பு
பிரதேச சபையின் உறுப்பினர்களான சி.குகனேசன், க.தர்மலவன்,
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன்,
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவரா, தாயக நினைவேந்தல் அமைப்பின் தலைவர் முல்லை ஈசன்,  இளைஞர்கள்,  பொதுமக்கள்,
சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை
செலுத்தியிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments