Wednesday, July 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைராஜித சேனாரத்ன வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

ராஜித சேனாரத்ன வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஆஜராகுமாறு தெரிவித்து
குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும்
கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால்,  அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது
வீட்டிற்குச் இன்று  சென்று அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் திட்டத்தை சட்டவிரோதமாக
செயல்படுத்தியதால் அரசுக்கு 262 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இலஞ்சம்
மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவின் சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர்இ முன்னாள் அமைச்சர்
ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதேவேளைஇ பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்
ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments