Thursday, August 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதீப்பந்தங்களுடன் வீதிக்கிறங்கிய மன்னார் மக்கள்

தீப்பந்தங்களுடன் வீதிக்கிறங்கிய மன்னார் மக்கள்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் 50 ஆவது நாளை எட்டிய நிலையில் நேற்று இரவு தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு
ஆகியவற்றுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்,  இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து போராட்டத்தைமுன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில்
நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த தீப்பந்த போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்
அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்,  இளையோர்,  பொது மக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments