Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி போராட்டம்

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி போராட்டம்

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும்,  மக்களுக்கு ஏற்படும்
நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று (02) காலை 11.00 மணிக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது.

ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு கோரி மன்னார் மாவட்டச் செயலாளரிடம்
போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய கடிதமும் வழங்கப்பட்டது.

காற்றாலை மின் திட்டத்தை நிறுத்தக் கோரி போராட்டங்கள் நடைபெற்றுக்
கொண்டிருந்த வேளையில்,  மற்றொரு குழுவினர் இந்தத் திட்டங்களை
நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது.
ஆனால் பொலிஸார் அதைச் கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தத் திட்டங்களைச்
செயல்படுத்தக் கோரி மன்னார் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments