வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழா பக்தர்கள் புடைசூழ
இன்று சிறப்பாக இடம்பெற்றது.
கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு கிரகங்களை
மேற்கொண்டு காலை 7:30 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் தேரில் ஏறி உலா வந்தார்.
முன்னே ஆஞ்சநேயப்பெருமான் செல்ல பின்னே விநாயகப்பெருமானும்இ லக்ஷ்மி தேவிய தொடர்ந்து வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் வலம் வந்தார்.
இன்றைய தேரத்திருவிழாவில் அடியவர்கள் அங்க பிரதட்டை, பால் காவடி, செடில்காவடி , தீச்சட்டி உட்பட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்துகொண்டனர்.

