Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவெளிநாட்டு அனுப்புவதாக கூறி யாழில் கோடி ரூபா மோசடி

வெளிநாட்டு அனுப்புவதாக கூறி யாழில் கோடி ரூபா மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,  யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும்,  வவுனியாவில்
நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன. அந்தவகையில் இது குறித்து
யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டனர்.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்று (13) கைது செய்தனர்.
கைது செய்து விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு
நீதிவான் உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments