Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவித்யா படுகொலை வழக்கு: மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

வித்யா படுகொலை வழக்கு: மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வித்யா வழக்கில்
நீதிமன்றில் குற்றவாளி என தீர்க்கப்பளிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட
பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் விசாரணையை
முடித்துள்ள உயர் நீதிமன்றம்,  அதன் தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாக
ஒத்தி வைத்துள்ளது.

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு,  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்காகக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை
விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட
மேன்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையே இவ்வாறு நிறைவு
செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்துஇ உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments