Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஹெரோயின் நுகர்ந்து கொண்டிருந்த மூவர் கையும் களவுமாக கைது

ஹெரோயின் நுகர்ந்து கொண்டிருந்த மூவர் கையும் களவுமாக கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த
மூன்று பேர் கையும் களவுமாக நேற்றைய தினம் பொலிஸாரால் கைது
செய்யப்ட்டுள்ளனர்.

இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி
உள்ளிட்ட சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான
பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள கருணாரத்ன தலைமையிலான குழுவினரின்

ரோந்து நடவடிக்கைகளின் கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞரும் அரியாலை பகுதியைச் சேர்ந்த முறையே 30 மற்றும் 32 வயதான இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம்
நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments