தற்கொலை செய்து இறந்த ஒருவரின் மரணத்தை என்னுடன் தொடர்புபடுத்தி
கொலை செய்யப்பட்டார் என இணைய வழி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில்
பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் அதுதொடர்பான தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகளும் எனக்கு எதிராக முகநூலில்களில் பரப்பப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஒழுங்கு பிரச்சினை தொடர்பில் கருத்து
தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

