டிட்வா சூறாவளியின் கடுமையான தாக்கங்களிலிருந்து நாடு தொடர்ந்து சிரமத்திற்கு
உள்ளாகி வரும் நிலையில், இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளை
ஆதரிப்பதற்காக அமெரிக்கா 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை உடனடியாக
ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங், நாடு முழுவதும் உள்ள சமூகங்கள்
‘கடினமான நாட்களை’ எதிர்கொள்கின்றன என்றும், பல பகுதிகளை பாதிக்கும்
கனமழை மற்றும் பரவலான வெள்ளம் என்றும் கூறினார்.
இந்த நெருக்கடியின் போது அமெரிக்கா இலங்கையுடன் ஒற்றுமையாக நிற்கிறது
என்றும்இ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான வாஷிங்டனின்
உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

