மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய
சிவப்பு எச்சரிக்கை மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இதுகுறித்து கடுமையான
விழிப்புடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தில் இருந்து
பாதுகாத்துக்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும்
நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு
அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம்
கோரிக்கை விடுத்துள்ளது.

