காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள்
தப்பியோட முயற்சித்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கித்
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்த குறித்த இரண்டு கைதிகளும் மீண்டும்
சிறைச்சாலைக்குள் ஓடி வந்துவிட்டதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இவர்கள் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,
அவர்கள் சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

