Monday, May 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

சுனாமி பேரவலத்தின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில்
அனுஷ்டிக்கப்பட்டது.

பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில்
பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு
தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதன்போது நினைவு கூரப்பட்டது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால்
சுனாமி பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி சுடர் ஏற்றப்பட்டதோடு
டித்வா புயலினால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி சுடரினை
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஏற்றி வைத்திருந்தார்.

இதனை அடுத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நினைவுத்தூபிக்கு மலர் மாலை மற்றும் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை அங்கு கலந்து கொண்டிருந்தவர்களால் அஞ்சலி தீபம்
ஏற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments