பொங்குதமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் தூபியினில் இன்று உணர்வுபூர்வமாக
முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தமிழ்மக்களின் கூட்டுரிமை மனோவெளிப்பாட்டின் நினைவுகளை
அகவணக்கத்துடன் மாணவர்கள் ஆரம்பித்தனர்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற
நினைவு நிகழ்வில் அனைத்து மாணவர்களும் கலந்துகொண்டு மலர் தூபி
உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.


