இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை இன்று (04) கொண்டாடும் வேளையில்
இ ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், ஜனாதிபதிக்கும் இலங்கை
மக்களுக்கும் சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தால் பகிரப்பட்ட ஒரு
கடிதத்தில், ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கையை இணைக்கும்
‘நீடித்த கூட்டாண்மை’ மற்றும் ‘ஆழமான வரலாற்று உறவுகளை’ பிரதிபலிக்கும்
அதே வேளையில், மன்னர் தனது ‘அன்பான வாழ்த்துக்களை’ தெரிவித்தார் –
என்று கூறப்பட்டுள்ளது.
அந்த வாழ்த்துச் செய்தில் இங்கிலாந்தில் இலங்கை சமூகத்தின் குறிப்பிடத்தக்க
பங்களிப்புகளையும் மன்னர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் கல்வி, வர்த்தகம் மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் நடந்து
வரும் ஒத்துழைப்பையும் பாராட்டினார்.
காலநிலை மாற்றத்தின் ஆழமான தாக்கத்தின் அப்பட்டமான நினைவூட்டல்
என்று சூறாவளியை விவரித்த மன்னர், அதனால், அன்புக்குரியவர்கள் மற்றும்
வீடுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.
அதே நேரத்தில் சூறாவளியைத் தொடர்ந்து இலங்கை அவசர சேவைகள்
மற்றும் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தையும்
பாராட்டினார்.

