Saturday, May 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவாகன இலக்கத் தகடுகள் அச்சிடலை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்

வாகன இலக்கத் தகடுகள் அச்சிடலை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும்
பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளுக்காக கேள்வி மனுக்கள்
கோரப்பட்ட பின்னர் நிறுவனமொன்றுக்கு அது வழங்கப்பட்டுள்ளதுடன்,
குறித்த நிறுவனம் அது தொடர்பான பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய,  மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெரவில்
அமைந்துள்ள பிரதான காரியாலயத்துடன் இணைந்து வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும்,  தற்போது சுமார் 4 இலட்சம் வாகனங்களுக்கு இலக்கத் தகடுகள்
விநியோகிக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்,  துரிதமாக குறித்த வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மேலும்
குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments