Thursday, April 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழ்ப்பாணம்,  அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்
கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (22)
இப்பொராட்டம் நடைபெற்றது.

அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனத்தை தாம் மறித்தபோது
,அதனை நிறுத்தாது சென்றமையால் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்
மேற்கொண்டதாகவும்இ இதில் வாகனத்தைச் செலுத்திய சிறுவன்
உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும்,  நிறுத்தாமல் சென்ற வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த பின்னரே
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும்,  இது பொலிஸாரால் திட்டமிட்டு
நடத்தப்பட்ட படுகொலை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையிலேயே,  உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி இந்தப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை,  இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும்
இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பதும்,  சம்பவம் தொடர்பான
அடுத்தகட்ட வழக்கு விசாரணை நாளை மறுதினம் (24) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments