கிளிநொச்சியில் பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில்
இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த அகழ்வு பணிகள் பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த அகழ்வின் போது எந்தவித தடையப் பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை இதனைத் தொடர்ந்து அகழ்வு பணி இடை நடுவே கைவிடப்பட்டது.
இவ் அகழ்வு பணியின் போது தொல்லியல் திணைக்கள அதிகாரிகள்,
கிராம சேவையாளர்இபொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கலந்து கொண்டனர்.

