Monday, April 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிமான பயணங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

விமான பயணங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தற்போது
நிலவும் போர்ச் சூழல் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்குள்ள வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக,  இலங்கையிலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும்
விமானங்கள் மற்றும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து
கொடுப்பதற்காக,  சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகமும்
தலைமை நிர்வாக அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்லவின்
தலைமையில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு
செல்வதற்கு முன்னர் தங்களது விமான சேவைகள் முகவர் நிலையத்துடன்
கலந்துரையாடி செல்வதால் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments