Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்உணவுப் பொருட்களின் விலை பாரியளவில் உயரும் அபாயம்: ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை

உணவுப் பொருட்களின் விலை பாரியளவில் உயரும் அபாயம்: ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள்
அதிகரிக்கக்கூடும் என்றும், அது ‘வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை
தீவிரப்படுத்தும்’ என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும்
அபிவிருத்தி சபை கவலை வெளியிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் பின்வருமாறு
குறிப்பிட்டுள்ளது:

எரிசக்தி, உரம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக
உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும்.

இது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களின்
வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும்.

உலகளாவிய கச்சா எண்ணெயில் 38 சதவீதமும்,  எல்பிஜி எரிவாயுவில் 29சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

உலகளவில் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே பயணிக்கின்றது.

இந்த நீரிணை ஊடாக அனுப்பப்படும் தயாரிப்புகளில் 84 சதவீதமானவை ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன.

எனவே,  இதன் தாக்கம் ஆசியப் பிராந்தியத்திலேயே மிக அதிகமாக உணரப்படும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்காகப் பாரிய விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments