யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் வலிக்கண்டியை
அண்மித்த பகுதியில் இறந்த நிலையில் இன்றைய தினம் காலை முதலை
ஒன்று காணப்பட்டுள்ளது.
பிரதான வீதியின் கரையோரப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் அதிகளவான முதலைகள் உள்ளதோடு தொடர்ந்து அவ் முதலைகள் இரவு நேரங்களில் வீதியோரங்களில் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாகவே கனகர வாகனம் மோதியதால் குறித்த முதலை
இறந்து இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.

