Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கான திகதி நிர்ணயம்

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கான திகதி நிர்ணயம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி
நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பாராளுமன்ற வாரத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து இன்று
(19) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுக்கூட்டத்திலேயே
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  குறித்த விவாதம் அன்றைய தினம் முற்பகல் 11.30 மணி முதல்
பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன்,  2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்
தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஏப்ரல் 9ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பிரேரணைகள் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments