யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை தெரிவித்து, அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கறுப்பு கொடியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால்
பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இன்று (19) 5 மணி நேரம் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்ட வேளை, அவர்களுக்கான சட்ட பிரதிநிதித்துவத்தை
மூத்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் வழங்கி இருந்தார்.

