மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள
எரிபொருள் நெருக்கடியினால் தபால் திணைக்களத்தின் கடிதப் போக்குவரத்து
சேவைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டுத் தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாத்திரம் சேவைகள் வழங்கப்படும், புதன்கிழமைகளில்
சேவைகள் முற்றாக நிறுத்தப்படும், புதன் மற்றும் ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் தபால் நிலையங்கள் திறந்திருக்கும். எனவே பொதுமக்கள் தங்கள் தபால் பொருட்களை அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

